Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உப்பிலியாபுரத்தில் கம்யூ.,  ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 30, 2020 10:51

துறையூர்: திருச்சி மாவட்டம துறையூர் வட்டம் உப்புலியபுரம் அண்ணா சிலை முன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்பழகன் தலைமையில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு,  ரேசன் கார்டுக்கு  தீபாவளி பண்டிகைக்கு நிவரணமாக ரூ.7,500 வழங்ககோரியும், அரிசி, பருப்பு, சர்கரை, மாவு வகைகளை ரேசனில் இலவசமாக வழங்ககோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் .பழனிசாமி, ஒன்றியகுழுவினரான முத்துக்குமார், கணேசன் மற்றும் வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், டி.ஒய்.எப்.ஐ.  சார்பில் பெருமாள் மற்றும் கோகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்